ADDED : ஜூலை 13, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலூரில் காங்., அலுவலகம் அமைக்க பல ஆண்டுகளுக்கு முன்பு கருவார்பட்டி கட்சி பிரமுகர் கிருஷ்ணசாமி சிறிது இடம் வழங்கினார்.
காங்., அலுவலகம் என பட்டாவும் பெற்று கட்டடம் கட்டினர். இதனிடையே இதன் முன்பு கட்சி நிர்வாகியான முருகன் சிறிய கடை அமைத்து நடத்தி வந்தார். அவர் கட்சி மாறிய நிலையில் இடத்தை ஒப்படைப்பு செய்யாமல் பிரச்னை நீடித்தது. இந்நிலையில் பின்புறம் இடம் வைத்துள்ள கிருஷ்ணசாமி வாரிசுகள் இரு நாட்களுக்கு முன் இரவில் காங்., அலுவலகத்தை இடித்து அகற்றினர். காங்., நிர்வாகிகள் வடமதுரை போலீசில் புகார் செய்த நிலையில் மீண்டும் அலுவலகம் அமைத்து கொள்ள ரூ. 1.80 லட்சம் வழங்குவதாக ஒப்புக்கொண்டனர். பணம் வழங்காதால் மீண்டும் காங்., நிர்வாகிகள் போலீசில் புகார் செய்துள்ளனர்.