sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கோயில்  ஆக்கிரமிப்பு நிலத்திற்கு வாடகை; அறங்காவலர் குழு தகவல்

/

கோயில்  ஆக்கிரமிப்பு நிலத்திற்கு வாடகை; அறங்காவலர் குழு தகவல்

கோயில்  ஆக்கிரமிப்பு நிலத்திற்கு வாடகை; அறங்காவலர் குழு தகவல்

கோயில்  ஆக்கிரமிப்பு நிலத்திற்கு வாடகை; அறங்காவலர் குழு தகவல்


ADDED : ஏப் 16, 2025 05:47 AM

Google News

ADDED : ஏப் 16, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அந்நிலத்திற்கு வாடகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறங்காவலர் குழு தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக முள்ளிபாடி கிராமத்தில் 45 ஏக்கர் நிலம் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலத்தில் அக்கிராமத்தினர் விவசாயம் செய்வதோடு வீடுகள் கட்டி உள்ளனர். இவர்களுக்கு அறநிலையத்துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதையடுத்து கிராமத்தினர் 200க்கு மேற்பட்டோர் கோயில் வந்து நிலத்தை ஒப்படைப்பதாகவும், தங்களின் வாழ்வாதாரம் காக்க வரும் காலத்தில் நிலத்திற்கான வாடகை ஒப்பந்தம் பெற்றுக் கொள்ள வேண்டும் என மனு அளித்தனர். கோயில் அறங்காவலர் குழுவினர் கலந்தாலோசித்து முடிவை தெரிவிப்பதாக கூறினார்.






      Dinamalar
      Follow us