ADDED : ஜன 29, 2026 05:40 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் வேதாத்திரி மகரிஷி பப்ளிக் பள்ளயில் தாளாளர் தாமோதரன் தலைமையில் குடியரசு தினவிழா நடந்தது. செயலாளர் நளினி, முதல்வர் மலர்விழி பங்கேற்றனர்.
திண்டுக்கல் ஆர்.எம். காலனி மேடா வித்யாலயாவில் தாளாளர் வனிதா கொடியேற்றினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றம் சார்பில் மாவட்டத்தலைவர் திருப்பதி கொடி ஏற்றினார். டால்டன் முன்னிலை வகித்தார். மன்ற நிர்வாகிகள் தண்டபாணி, மாரியப்பன், நவசிநாகராஜன், சுப்பிரமணி, சரவணன், நடராஜன், தேவராஜ், சுபா பங்கேற்றனர். ஏற்பாடுகளை முத்துக்குமார், கவுதம் செய்தனர்.
திண்டுக்கல் ஜெம் லயன்ஸ் சங்கம் சார்பில் வானவில் பார்வையற்றோர் காப்பகத்தில் தலைவர் கணேசன் கொடியேற்றினார். நிர்வாகிகள் பாலசுப்பிரமணி, ரமேஷ்பாபு, வேல்ராஜ், ரவிச்சந்திரன், ராமமூர்த்தி, சரவணன், கார்த்திகேயன் பங்கேற்றனர்.
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் மாவட்ட கால்பந்து கழகச்செயலாளர் சண்முகம் கொடி ஏற்றினார்.

