sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நாய்கள், கொசுக்களால் நித்தம் நித்தம் தொல்லை; தனித்தீவு போன்று வாழும் ஜி.எஸ்.நகர், குடியிருப்போர்

/

நாய்கள், கொசுக்களால் நித்தம் நித்தம் தொல்லை; தனித்தீவு போன்று வாழும் ஜி.எஸ்.நகர், குடியிருப்போர்

நாய்கள், கொசுக்களால் நித்தம் நித்தம் தொல்லை; தனித்தீவு போன்று வாழும் ஜி.எஸ்.நகர், குடியிருப்போர்

நாய்கள், கொசுக்களால் நித்தம் நித்தம் தொல்லை; தனித்தீவு போன்று வாழும் ஜி.எஸ்.நகர், குடியிருப்போர்


ADDED : அக் 29, 2025 06:56 AM

Google News

ADDED : அக் 29, 2025 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: நாய்கள் தொல்லையால் அவதி, குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர், துார்வாரப்படாத சாக்கடை, இல்லாத கழிவுநீர் ஓடைகள், விளக்குகள் இன்றி அச்சம் என பல்வேறு பிரச்னைகளோடு திண்டுக்கல் ஜி.எஸ்., நகர் குடியிருப்பு வாசிகள் தவிக்கின்றனர்.

திண்டுக்கல் - பழைய கரூர் ரோட்டில் உள்ள ஜி.எஸ். நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கண்ணன், செயலாளர் சிவலிங்கம், பொருளாளர் கணேசன், உறுப்பினர்கள் விஜய், சிவக்குமார் கூறியதாவது:

புறநகர் பகுதியில் உள்ள எங்கள் குடியிருப்பு பகுதிகளை எவரும் கண்டு கொள்வதில்லை.

வீடுகளுக்கு இடையே உள்ள காலியிடங்களில் மழைநீர், கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் உள்ள இடைவெளி ஒரு தீவில் இருந்து இன்னொரு தீவிற்கு செல்வது போல் உள்ளது.

காலியிடங்களில் தேங்கி நிற்கும் நீரால் கொசு உற்பத்தியாதோடு நோய் தொற்று அபாயம் உள்ளது. கழிவுநீர் ஓடைகள் வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லை.

மழைக்காலங்களில் ரோட்டில் வெள்ளம் போல் கழிவு நீர் ஓடுகிறது. 10 தெருக்கள் உள்ள எங்கள் குடியிருப்பு பகுதியில் ஒரு தெருவில் கூட ரோடு சரியாக இல்லை. மேடு, பள்ளமாக காட்சி யளிக்கிறது.

மழைகாலம் தொடங்கி விட்டதால் பள்ளங்களில் நீர் தேங்க சென்று வரவே சிரமமாக உள்ளது.

குடியிருப்பை யொட்டிய பின்பகுதியில் ஓடும் சாக்கடை ஆங்காங்கே உடைந்து குடியிருப்புக்குள் கழிவுநீர் வந்து விடுகிறது.

இந்த கால்வாயை துார்வாரி சரிசெய்தால் கழிவுநீர் வருவது தவிர்க்கப்படும். பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

நாய்கள் தொல்லையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள், பெண்கள் என ஒட்டுமொத்தமாக பலரும் அவதிப்பட்டு வருகிறோம்.

பழைய கரூர் ரோட்டையொட்டி குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. ரோட்டில் ஒரு விளக்கு கூட இல்லை. அருகே உள்ள கல்லுாரியில் உள்ள வெளிச்சம் மட்டுமே இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் சென்று வர அச்சப்படுகின்றனர்.

மழைகாலம் வந்தாலே குடியிருப்பு பகுதியே ஒரு தனித்தீவு போல் மாறி விடுகிறது. கொசுமருந்துகள் அடிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லாத சூழல் தான் நிலவுகிறது.

குப்பை தொட்டிகள் எங்குமே இல்லை. குப்பை அள்ள எவருமே வருவதில்லை. போதிய அடிப்படை வசதிகள் இப்பகுதியில் இல்லை என்றனர்.






      Dinamalar
      Follow us