ADDED : டிச 06, 2025 05:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தேர்தல் வாக்குறுதியில் அறிவித்ததுபோல் ஓய்வூதியர்கள் ,குடும்ப ஓய்வூதியர்களுக்கு 70 வயதில் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், மாதந்தோறும் மருத்துவபடி ரூ. ஆயிரம் உயர்த்திட வேண்டும்,
பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு மாவட்ட தலைவர் தம்பிதுரை தலைமை வகித்தார். வட்டகிளைதலைவர் சீனி, மாவட்ட செயலாளர் தண்டபாணி பேசினர். மாவட்ட பொருளாளர் ஞானசேகர் நன்றி கூறினார்.

