ADDED : ஜன 22, 2026 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் சரவணன் துவக்கி வைத்தார். வட்டாரபோக்குவரத்து அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார்.
மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சண்முக ஆனந்த் (திண்டுக்கல்), இளங்கோ (வத்தலக்குண்டு), சிவக்குமார் (நத்தம்) முன்னிலை வகித்தனர்.
திண்டுக்கல் மாநகரில் உள்ள டூவீலர், கார் விற்பனை நிலைய பிரதிநிதிகள்தங்களது டூவீலர்களில் ஹெல்மெட் அணிந்து, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி சென்றனர்.

