/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தரமில்லாத ஆயில் அனுப்பி; ரூ.22 லட்சம் நுாதன மோசடி
/
தரமில்லாத ஆயில் அனுப்பி; ரூ.22 லட்சம் நுாதன மோசடி
தரமில்லாத ஆயில் அனுப்பி; ரூ.22 லட்சம் நுாதன மோசடி
தரமில்லாத ஆயில் அனுப்பி; ரூ.22 லட்சம் நுாதன மோசடி
ADDED : ஜன 25, 2026 06:38 AM
வேடசந்துார்: சென்னை, கே.கே.நகர் பயோ டீசல் தயாரிப்பு தனியார் கம்பெனி, மும்பையை தலைமையிடமாக கொண்டு, அனைத்து மாநிலங்களிலும் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் சென்னை ஏரியா சேல்ஸ்மேனாக பணிபுரிபவர் வெங்கடாசலம்.
இவரது மொபைல் போனுக்கு, கார்த்திக் என்பவர் தொடர்பு கொண்டு, எனக்கு தெரிந்த ரமேஷ், கிஷோர், வீரமணி ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் லட்சுமணன்பட்டியில் ஆயில் நிறுவனம் நடத்துவதாகவும், தேவையான ஆயிலை வாங்கி தருவதாகவும் கூறினார். மேலும், பரிசோதனைக்காக ஒரு கிலோ ஆயில் அனுப்பினார்.
தரமாக இருந்ததால் கிலோவுக்கு, 85 ரூபாய் என, விலை பேசி, சென்னை கம்பெனிக்கு 26,240 கிலோ ஆயிலை, வந்து ஏற்றி சென்றனர். இதற்காக மூன்று தவணைகளில், 22 லட்சத்து 400 ரூபாயை கார்த்திக் பெயரில் அனுப்பினர்.
பின், பரிசோதித்த போது, தரம் குறைந்த ஆயிலை அனுப்பியது தெரிந்தது. சீனிவாசன் புகாரின்படி, கார்த்திக், ரமேஷ், கிஷோர், வீரமணி மீது போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

