ADDED : மே 17, 2025 01:44 AM

சின்னாளபட்டி: பத்தாம் வகுப்பு தேர்வில் சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தொடர்ந்து 22 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சியுடன் சாதனை படைத்து வருகிறது.
மாணவி வி.சசிரேகா பாடவாரியாக தமிழ் 98, ஆங்கிலம் 95, கணிதம் 99, அறிவியல் 100, சமூக அறிவியல் 99 என 491 மதிப்பெண் ,மாணவி பி.பாலசந்தியா தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 98, அறிவியல் 99, சமூக அறிவியல் 100 என 490 . மாணவி எம்.தாட்சியா, தமிழ் 95, ஆங்கிலம் 96, கணிதம் 98, அறிவியல் 100, சமூக அறிவியல் 100 , ஆர்.ஹரிநந்தினி, தமிழ் 98, ஆங்கிலம் 99, கணிதம் 98, அறிவியல் 99, சமூக அறிவியல் 95 என 489 மதிப்பெண் பெற்றனர்.
56 பேர் 450க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். சாதனை மாணவர்களை சேரன் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எம்.சிவக்குமார், பள்ளி முதல்வர் என்.திலகம் பரிசு வழங்கினார்.
துணை மேலாளர் வெண்ணிலா, மேலாளர் பாரதிராஜா முன்னிலை வகித்தனர். கணக்காளர்கள் மகேஸ்வரி, நித்தியபிரியா, அருள்ஜோதி பங்கேற்றனர்.