ADDED : ஆக 28, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
பழநி, ஆக.29
பழநி சண்முக நதியில் அமலைச் செடிகள், குப்பையை அகற்றி துாய்மை செய்யும் பணியில் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பினர் ஈடுபட்டனர்.
பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த நதியில் நீராடுவது வழக்கம். சில மாதங்களாக இந்த நதியில் அமலைச் செடிகள் மிகுந்து, பிளாஸ்டிக், துணிகள் என குப்பைக்கழிவுகளால் அசுத்தமாக காணப்பட்டது.
இதையடுத்து ‘வீ த லீடர்ஸ்’ தன்னார்வ அமைப்பு சார்பில் சண்முக நதி பகுதியில் அமலைச் செடிகள், குப்பையை அகற்றி துாய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். 6 மாதத்திற்குள் நதி முழுதும் துாய்மைப்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
