ADDED : செப் 08, 2026 04:43 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சண்முக நதியில் நீராடி அதன்பின் கோயிலுக்கு வந்து வழிபடுவர். சில மாதங்களாக இந்நதியில் அமலைச்செடிகள் மிகுந்து பிளாஸ்டிக், குப்பை, துணிகள் என அசுத்தமாக உள்ளது.
எனவே 'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் சண்முக நதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து துாய்மை பணியில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., ரவி மனோகரன் கூறுகையில், 'சண்முக நதி வெறும் நதி மட்டும் அல்ல; புனித தீர்த்தம். சாக்கடை நீர் கலப்பதாலும், குப்பையாலும் நதி அசுத்தம் அடைந்துள்ளது. சண்முக நதி, வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவற்றை துாய்மை செய்வது குறித்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்' என்றார்.
