ADDED : பிப் 16, 2025 03:04 AM
அ நிறம் | அளவு
கோபால்பட்டி : கோபால்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா தலைமை ஆசிரியை மரியாள் தலைமையில் நடந்தது.
முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், முன்னாள் ஊராட்சி தலைவர் கந்தசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாலகுரு, காதர்பாட்ஷா, தாமோதரன், பூபதி கலந்து கொண்டனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
