
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா தலைமை வகித்தார். கலைமகள் பள்ளியின் தாளாளர் பெருமாள், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகவேலு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் காந்திமதி வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் பிரான்சிஸ்ஆரோக்கியராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகர் தொகுத்து வழங்கினார்.
முன்னாள் ஆசிரியர்கள் சீனியம்மாள், ஆல்பர்ட், கலைமகள் பள்ளி தலைமை ஆசிரியர் ராமு பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் ஜெயநாதன் நன்றி கூறினார்.

