
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி: நெய்க்காரப்பட்டியில் ராமச்சந்திரா இன்டர் நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் ரஞ்சிதம் தலைமை வகித்தார். பேச்சாளர் முத்துக்குமரன், சாந்தாமணி கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்கள் நடனம்,இசை, நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்தினர். விளையாட்டுப் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பாராட்டினர். பள்ளி செயலாளர் கிரிநாத், பவிதா, நிர்வாக அறங்காவலர் பாபு, பள்ளி முதல்வர் கார்த்திக்குமார், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

