நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி குழுமம் சார்பில் ஆண்டு விழா நடந்தது. தாளாளர் பெருமாள் தலைமை வகித்தார். இயக்குனர்கள் சுப்பம்மாள், அருள்மணி, ஹரிஸ்செந்தில் முன்னிலை வகித்தனர். துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலரவிச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராமு, பி.டி.ஏ., தலைவர் குப்பாச்சி பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

