ADDED : மார் 17, 2025 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை : சவுராஷ்டிரா நடுநிலைப் பள்ளியில் நுாற்றாண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் சுதாகரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஸ்ரீநேரு முன்னிலை வகித்தார்.
ஆசிரியர் பத்மினி வரவேற்றார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, வட்டார கல்வி அலுவலர் செல்லின் மேரி, நிலக்கோட்டை டி. எஸ். பி., செந்தில்குமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் டாக்டர் செல்வராஜ், வட்டார வள மைய அலுவலர் கருப்பையா பரிசு வழங்கினர். ஆசிரியர்களுக்கான நினைவு கேடயத்தை கல்வி அலுவலர் வழங்கினார். ஆசிரியர் ராஜி நன்றி கூறினார்.