/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவிக்கு தொல்லை பள்ளி ஆசிரியர் கைது
/
மாணவிக்கு தொல்லை பள்ளி ஆசிரியர் கைது
ADDED : ஜன 25, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி:திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி தமிழாசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 42. நத்தம் அருகே செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிகிறார். இவர், பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். தலைமறைவாக இருந்த மணிகண்டனை சாணார்பட்டி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

