ADDED : மார் 01, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது. முதல்வர் ரவிசங்கர் தலைமை வகித்தார். மதுரை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மைய விஞ்ஞானி முனியராஜ், பி.எஸ்.ஜி., கலைக் கல்லூரி நுண் வேதியியல் துறை பேராசிரியர் வளர்மதி ஆகியோர் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு நாட்டின் அறிவியல் வளர்ச்சி நிலைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. துறைத்தலைவர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
