ADDED : ஜன 09, 2025 05:32 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: திண்டுக்கல் ஜி.டி.என்.,கலை கல்லுாரியின் பி.கே.19 ஹாலில் தகவல் தொழில் நுட்ப துறை சார்பில் புல் ஸ்டாக் டெவலப்மென்ட் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி மாணவி அர்ச்சனா மேனன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சரவணன்,தாளாளர் ரெத்தினம்,கல்வி இயக்குநர் மார்க்கண்டேயன் துணை முதல்வர் நடராஜன் பேசினர்.
பேராசிரியர் பானுப்பிரியா, சூரிய பிரசன்னா பங்கேற்றனர். 3ம் ஆண்டு மாணவர் டொனால்டு ஸ்டீவேர்டு வேலன்டைன் நன்றி கூறினார்.
