ADDED : நவ 21, 2025 05:19 AM
அ நிறம் | அளவு
பழநி: பழநி தாலுகா அலுவலகத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். நிலம், வருவாய், ஜாதி, இருப்பிட சான்றிதழ் தொடர்பான ஆவணங்களை பெற அலுவலகத்தை நாடுகின்றனர்.
நேற்று சில மணி நேரங்கள் சர்வர் பாதிப்பு ஏற்பட்டதால் சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.
அதிகாரி ஒருவர் கூறுகையில், சர்வர் செயல்பாட்டை மேம்படுத்த சில நாட்களில் சில மணி நேரங்கள் சர்வர் செயல்பாடு தாமதப்படும். அன்றைய தினமே சரி செய்யப்படும் என்றார்.
