ADDED : மார் 17, 2025 01:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சேர்ந்த இன்ஜினியர் பாண்டித்துரை, 36; பெங்களூரில் பணிபுரிகிறார். சில தினங்களுக்கு முன் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு திருவிழாவிற்காக வந்தார்.
ரோட்டோரத்தில் நடந்து சென்ற 13 வயது பள்ளி மாணவியை அவரது வீட்டில் விடுவதாக கூறி, பாண்டித்துரை டூ - வீலரில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்தார்.
அம்மாணவி அவரிடமிருந்து தப்பி வந்து, பெற்றோரிடம் கூறினார். சாணார்பட்டி மகளிர் போலீசார் விசாரித்து, 'போக்சோ'வில் பாண்டிதுரையை கைது செய்தனர்.