ADDED : அக் 12, 2025 05:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் பழநி கல்வி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு திறன் போட்டிகள் நடந்தது.
கல்லுாரி முதல்வர் வாசுகி தொடங்கி வைத்தார். போட்டிகளில் 300 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு கல்லுாரி முதல்வர் பரிசுகளை வழங்கினார்.