ADDED : அக் 10, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துா : தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் கம்பு, சோளம், ராகி உள்ளிட்ட சிறுதானிய உற்பத்தியில் ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், சிறுதானிய உணவுகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு வாகன ஊர்வலம் நடந்தது.
ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி துவக்கி வைத்தார். வேளாண் உதவி ஜெயக்குமார், அலுவலர் ஆதி, அட்மா திட்ட பணியாளர்கள் ராஜேந்திரன், உதயகுமார் பங்கேற்றனர்.

