UPDATED : செப் 12, 2026 10:49 PM
ADDED : செப் 12, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு:சமூக நலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கான சமூக வளைகாப்பு விழா வத்தலக்குண்டில் நடந்தது. கலெக்டர் துர்கா தலைமை வகித்தார். ஆர்.டி.ஓ., பழனிவேல் முன்னிலை வகித்தார். மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் விழாவை துவக்கி வைத்து கர்ப்பணிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். நிலக்கோட்டை எம்.எல்.ஏ., அய்யனார் வரவேற்றார்.
மாவட்ட சமூக நல அலுவலர் கரோலின் செல்வராணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காந்திமதி, நிலக்கோட்டை தாசில்தார் ராமசாமி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
