/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விபத்தில் தாய் பலியான நிலையில் மகனும் பலி
/
விபத்தில் தாய் பலியான நிலையில் மகனும் பலி
ADDED : நவ 07, 2025 02:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே மணப்பச்சேரியை சேர்ந்தவர் முருகன் 55.இவரது மனைவி அழகுமீனாள் 50. இவர் நேற்று முன்தினம் மகன் சரவணபாண்டி 24 ,உடன் டூவீலரில் நத்தம் அருகே பண்ணுவார்பட்டியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பினார்.
கொட்டாம்பட்டி சாலை பூதகுடி பிரிவில் சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியது.இதில் அழகுமீனாள் பலியானார். காயமடைந்து மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட சரவணபாண்டி இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

