ADDED : ஏப் 14, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
ரெட்டியார்சத்திரம் : ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயிலில் வெளி மாநில பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதையொட்டி மூலவருக்கு பாலாபிஷேகம், பழக்காப்பு அலங்காரத்துடன் விசேஷ பூஜைகள் நடந்தது.
சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் , பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு பழக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.
-
