/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்; கலெக்டர் தகவல்
/
பழநி தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்; கலெக்டர் தகவல்
பழநி தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்; கலெக்டர் தகவல்
பழநி தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில்; கலெக்டர் தகவல்
ADDED : டிச 19, 2025 07:58 AM

திண்டுக்கல்: ''பழநி தைப்பூசத் திருவிழாவிற்காக சிறப்பு ரயில்களை இயக்க தென்னக ரயில்வேக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக,'' கலெக்டர் சரவணன் கூறினார்.
பழநி கோயில் தைப்பூச திருவிழா ஜன. 26ல் கொடியேற்றத்துடன் தொடங்கி பிப். 4 வரை நடக்கிறது. இது தொடர்பாக அனைத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறியதாவது : பக்தர்களின் வசதிக்காக , நெரிசலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ரயில்கள் இயக்க தென்னக ரயில்வேக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கோவை, திண்டுக்கல் வழித்தடங்களில் பாதயாத்திரை பக்தர்களின் வசதிக்காக நடைபாதை புதர்கள், குப்பை, கற்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. தற்காலிக விளக்குகள் ,கழிப்பறைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை ஒருங்கிணைக்க , கண்காணிக்க பி.டி.ஓ.,க்கள் நிலையில் கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. முதலுதவி மருத்துவ முகாம்கள்,8 பைக் ஆம்புலன்ஸ் , ஆம்புலன்ஸ் வசதிகளுடன் மருத்துவ குழுவினர் மருத்துவ பொருட்களுடன் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முருகன்கோயில், யானைப்பாதை ,படிப்பாதை, முடிமண்டபங்கள், தங்கும் விடுதிகள் , கிரிவீதியில் 892 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.

