sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மாவட்டத்தில் மார்கழி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு

/

 மாவட்டத்தில் மார்கழி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு

 மாவட்டத்தில் மார்கழி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு

 மாவட்டத்தில் மார்கழி மாத கார்த்திகை சிறப்பு வழிபாடு


ADDED : ஜன 01, 2026 05:55 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: கார்த்திகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அலங்காரம் நடந்தது.

பழநி முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை, ஆறு கால பூஜையில் நடைபெற்றது. உள்ளூர்,வெளியூர், வெளி மாநில பக்தர்கள் படிப்பாதை, வின்ச் மூலம் கோயில் சென்றனர்.

பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்ததால் குடமுழுக்கு மண்டபம் வழியாக மலைக்கோயில் செல்ல படிப்பாதையில் அனுமதிக்கப் பட்டனர்.

3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மாலையில் விளக்கு பூஜை திருக்கல்யாண மண்டபத்தில் நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல்:: கார்த்திகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

அதேபோல் திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன், என்.ஜி.ஓ. காலனி முருகன், ஒய்.எம்.ஆர்., பட்டி முருகன் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் மூலவர், வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு, சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. சிவசுப்பிரமணியருக்கு, வெள்ளி கவசம், ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.

ரெட்டியார்சத்திரம்: கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.






      Dinamalar
      Follow us