ADDED : மார் 30, 2025 03:15 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல் : மும்மொழிக்கொள்கையை ஆதரித்து பா.ஜ., திண்டுக்கல் தெற்கு ஒன்றியம் சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது.
ஒன்றிய தலைவர் கதிரவன் தலைமை வகித்தார். பொதுச்செயலர்கள் ஜெய்சங்கர், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், முன்னாள் தலைவர் தனபாலன், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி பேசினர். செயலர் சபாபதி, ஒன்றிய துணைத்தலைவர் சரோஜா, பொருளாளர் செந்தில்குமார், தொழில்நுட்பபிரிவு ரவிச்சந்திரன், ஒன்றிய செயலர் தனபால் கலந்து கொண்டனர். நிர்வாகி செந்தாமரைக்கண்ணன் நன்றி கூறினார்.
