ADDED : பிப் 24, 2026 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: பழநியில் தே.ஜ., கூட்டணி சார்பாக பா.ஜ., தெருமுனை கூட்டம் மணியக்காரர் தெரு, நாயக்கர் தெரு, மறவர் தெரு ஆகியவற்றில் நடந்தது. ஆயக்குடி பேரூராட்சியில் சாலை வசதி, சாக்கடை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத தி.மு.க.,வை கண்டித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், கிழக்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ், எஸ்.டி., பிரிவு மாநில செயலாளர் மஞ்சப்பன்,மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ரஞ்சித் குமார், கிழக்கு ஒன்றிய பொருளாளர் வீரபாண்டியன் கலந்து கொண்டனர்.

