ADDED : ஜன 10, 2026 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: இடைநிலை பதிவு மூட்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 5வது நாளாக தொடர் வேலை நிறுத்தம் , காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்தது.
திண்டுக்கல் பழநி ரோட்டில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இயக்கத்தின் நத்தம் வட்டாரத் தலைவர் ஜோசி தலைமை வகித்தார்.
வத்தலக்குண்டு வட்டார மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் கனிமொழி முன்னிலை வகித்தார்.
மாவட்டம் முழுவதும் 400 பேர் நேற்று தொடக்கப்பள்ளிகளின் கற்றல் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் மாணவர்களுக்கான கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன.

