ADDED : அக் 03, 2025 01:17 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்; திண்டுக்கல் அருகே சீலப்பாடியைச் சேர்ந்தவர் சரவணன் மகள் தனஸ்ரீ 17. தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
