sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 தனி வகுப்பறை கோரி மாணவர்கள் மறியல்

/

 தனி வகுப்பறை கோரி மாணவர்கள் மறியல்

 தனி வகுப்பறை கோரி மாணவர்கள் மறியல்

 தனி வகுப்பறை கோரி மாணவர்கள் மறியல்


ADDED : பிப் 07, 2026 05:57 AM

Google News

ADDED : பிப் 07, 2026 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: அய்யலுார் பள்ளியில் தனி வகுப்பறை கோரி மாணவர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

அய்யலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை பற்றாக்குறையால் புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இதில் 11ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறையில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கும் பணி துவங்கியது. இதற்காக அங்கிருந்த மாணவர்கள் மற்றொரு வகுப்பறை மாணவர்களுடன் சேர்ந்து உட்கார வைத்தனர். ஆத்திரமடைந்த மாணவர்கள் தங்களுக்கு தனி வகுப்பறை கோரி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பஞ்சந்தாங்கி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். பள்ளி ஆசிரியர்கள் சமாதானம் செய்து போராட்டத்தை கைவிட செய்தனர். இதை தொடர்ந்து பழைய பொருட்கள் வைத்திருந்த அறையை சுத்தம் செய்து மாணவர்களுக்கு வகுப்பறை ஏற்படுத்தி தரப்பட்டது.






      Dinamalar
      Follow us