/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டவுன் பஸ் நிறுத்தம் மாணவர்கள் அவதி
/
டவுன் பஸ் நிறுத்தம் மாணவர்கள் அவதி
ADDED : டிச 27, 2024 05:21 AM
தாடிக்கொம்பு: திண்டுக்கல்லிருந்து மாலை 4:20 மணிக்கு வேடசந்துார் புறப்பட வேண்டிய டவுன் பஸ் சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மாலை 4:00 மணி முதல் பஸ்டாண்ட் வரும் மாணவர்கள் வேடசந்துார் செல்ல போதிய பஸ் வசதி இல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
திண்டுக்கல்லிலிருந்து வேடசந்துாருக்கு மாலை 4:20 மணிக்கு புறப்பட வேண்டிய டவுன் பஸ்சும் சில மாதங்களாக நிறுத்தப்பட்டது. இதனால் மாலை நேரத்தில் அரசு பஸ் பாஸ் கொடுத்தும், பள்ளி மாணவர்கள் பயன்பெற முடியாத நிலை நீடிக்கிறது. மாலை நேரத்தில் வேடசந்துார் செல்லும் அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் மாணவர்கள் தொடர் அவதியை சந்திக்கின்றனர். மேலாளர் அசோக் குமார் கூறியதாவது, திண்டுக்கல்லில் மாலை 4:20 மணிக்கு புறப்பட வேண்டிய அரசு டவுன் பஸ் தான் 6 மாதங்களுக்கு முன்பு, வேடசந்துாரிலிருந்து நல்லபொம்மன்பட்டிக்கு மாற்றி விட்டோம்.
மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

