sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' யில் துவங்கியது கோடை விழா , மலர் கண்காட்சி

/

'கொடை' யில் துவங்கியது கோடை விழா , மலர் கண்காட்சி

'கொடை' யில் துவங்கியது கோடை விழா , மலர் கண்காட்சி

'கொடை' யில் துவங்கியது கோடை விழா , மலர் கண்காட்சி


ADDED : மே 25, 2025 02:13 AM

Google News

ADDED : மே 25, 2025 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்:கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 62வது மலர் கண்காட்சி , கோடை விழா நேற்று துவங்கியது.

மலர் கண்காட்சியை திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் துவக்கி வைத்தார். சுற்றுலாத்துறை செயலாளர் மணிவாசன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் தட்சிணாமூர்த்தி, திண்டுக்கல் கலெக்டர் சரவணன், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, நகராட்சி கமிஷனர் சத்தியநாதன், நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆர்.டி.ஓ., திருநாவுக்கரசு,தோட்டக்கலை துணை இயக்குனர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மலர் கண்காட்சியில் காய்கறி, பழங்கள், பூக்களால் ஆன மயில், கங்காரு புவிசார் குறியீடு பெற்ற திண்டுக்கல் பூட்டு, ஆயக்குடி கொய்யா, கொடைக்கானல் மலைப்பூண்டு, ஹார்டின் செல்பி பாய்ன்ட், பூனை அமைப்புகள் சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. ஏராளமான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

அமைச்சர்கள் ஆப்சென்ட்


இங்கு மலர் கண்காட்சி , கோடை விழாவில் அமைச்சர்கள் பெரியசாமி, பன்னீர்செல்வம்,சக்கரபாணி ,ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அமைச்சர்கள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை. பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமாரும் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை. 2024ல் தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருந்ததால் அதிகாரிகள் கலந்து கொண்டது போல் இந்தாண்டும் அமைந்தது.

சுற்றுலா பயணிகள் கூறியதாவது:


பிரம்பிக்க வைத்தது


உடன்குடி விவசாயி கிருஷ்ணா கூறுகையில்'' முதன் முறையாக கொடைக்கானலுக்கு வந்தது மகிழ்ச்சியளித்தது. சுற்றுலாத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அருமையாக இருந்தது. தோட்டக்கலைத்துறை மலர்களால் வடிவமைத்த புவிசார் குறியீடு பெற்ற கொய்யா, திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு பிரம்மிக்க வைத்தது ''என்றார்.

கவர்ந்தது


சென்னை பத்மபிரியா கூறுகையில் '' மயில் வடிவமைப்பு வெகுவாக கவர்ந்தது. லட்சக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கியதுமனதிற்கு இதமாக இருந்தது. இங்கு நிலவும் இதமான சீதோஷ்ண நிலை, ஏற்பாடுகள் என ஒட்டுமொத்தத்தில் மலர்கண்காட்சி அருமையாக இருந்தது''என்றார்.

அருமை


காஞ்சிபுரம் பிரியா கூறுகையில்'' பூங்காவில் மலர் வடிவமைப்புகள் அருமை. காய்கறிகளால் உருவான கிளி, யானை , அணில் உள்ளிட்ட சிற்பங்கள் மனதை வருடுவதாக இருந்தது. கொடைக்கானல் சுற்றுலா மிக அருமையாக அமைந்திருந்தது''என்றார்.






      Dinamalar
      Follow us