sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தலைமை செயலகம் முன் காலவரையற்ற போராட்டம்; டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

/

தலைமை செயலகம் முன் காலவரையற்ற போராட்டம்; டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

தலைமை செயலகம் முன் காலவரையற்ற போராட்டம்; டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

தலைமை செயலகம் முன் காலவரையற்ற போராட்டம்; டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு


ADDED : ஜூன் 03, 2025 06:57 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : ''கோரிக்கைகளை வலியுறுத்தி அக்., 2-ல் சென்னை தலைமை செயலகம் முன் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்'' என தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில தலைவர் பெரியசாமி கூறினார்.

திண்டுக்கல்லில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் பெரியசாமி தலைமையில் நடந்தது. டாஸ்மாக் பணியாளர்களை இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைக்க வேண்டும். பணியாளர்களின் பணி ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரியசாமி கூறியதாவது: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றும் 30 ஆயிரம் பேரை பணி நிரந்தரம் செய்யக்கோரி 22 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதற்காக பிப்ரவரியில் தலைமை செயலகம் முன்பு போராட்டம் நடத்தினோம். அதன் பிறகு தீர்வு கிடைக்கும் என நம்பினோம். கிடைக்கவில்லை. டாஸ்மாக் விற்பனையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க 'எண்டு டூ எண்டு' திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதிலும் பல்வேறு இடர்பாடுகள் பணியாளர்களுக்கு ஏற்படுகிறது. இதை களைய புதிய கணினி மென்பொருளை உருவாக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். இதன் கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 2-ம் தேதி சென்னை தலைமை செயலகம் முன் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என்றார்.






      Dinamalar
      Follow us