ADDED : அக் 10, 2025 03:20 AM

அ நிறம் | அளவு
வடமதுரை: அய்யலுார் தீத்தாகிழவனுார் கோயில் தோட்டம் நியாய விநாயகர், பேசும் பழனியாண்டவர், கானகத்து மாரியம்மன், இடும்பன், ஆதிசிவன் கோயிலில் 59வது ஆண்டு விழா நடந்தது.
யாக பூஜை, 16 வகை அபிஷேகங்கள், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சுவாமி ஊர்வலம் புறப்பட்டு கடவூர் பிரிவு வரை சென்று அய்யலுார் கடை வீதி வழியே சன்னதி திரும்பியது. ஏற்பாட்டினை கோயில் நிர்வாகி வி.செந்தில்நாதன் விழா குழுவினர் செய்திருந்தனர்.
