UPDATED : ஆக 31, 2026 09:44 PM
ADDED : ஆக 31, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு:அய்யன்கோயில்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட அய்யனார், நாகம்மாள், மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த யாக வேள்வி பூஜைகளை தொடர்ந்து புனிதநீர் குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
அய்யனார், நாகம்மாள், மதுரை வீரனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.
