/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிக லாபம் ஆசை ரூ.8 லட்சம் போச்சு
/
அதிக லாபம் ஆசை ரூ.8 லட்சம் போச்சு
ADDED : ஆக 22, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி வியாபாரி சுலைமான்சேட், 52. சில மாதங்களுக்கு முன் இவரின் 'வாட்ஸாப்' எண்ணுக்கு, ஆன்லைனில் வர்த்தகம் செய்தால், அதிக லாபம் பெறலாம் என, குறுந்தகவல் வந்தது. அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக 8 லட்சம் ரூபாயை அனுப்பி சுலைமான் சேட் முதலீடு செய்துள்ளார்.
தொடக்கத்தில் அவருக்கு லாபம் கிடைத்தது. அதன்பின், பணம் வருவது நின்றது. சந்தேகமடைந்த அவர், அந்த ' வாட்ஸாப ் ' எண்ணை தொடர்புகொள்ள மு யன்றும் முடியவில்லை. சுலைமான்சேட் புகாரின்படி, சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.