ADDED : ஜூலை 05, 2025 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி ; பழநியில் தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் பொது இ சேவை மையம் சர்வர் பாதிப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
பழநி பகுதியில் ஆதார் கார்டு திருத்தம் செய்ய அரசு சார்பில் பொது இ சேவை மையம் நகராட்சி அலுவலகம், தலைமை தபால் நிலையம், தாலுகா அலுவலகம் என மூன்று இடங்களில் செயல்படுகிறது. சில நாட்களாக தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பொது இ சேவை மையம் சர்வர் பாதிப்பு காரணமாக முடங்கியது . இங்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.