/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அரசு பள்ளிகளுக்கு 100 இருக்கை அமைச்சர் வழங்கினார்
/
அரசு பள்ளிகளுக்கு 100 இருக்கை அமைச்சர் வழங்கினார்
ADDED : பிப் 20, 2025 05:46 AM
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கே.ஆர். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான 100 இருக்கைகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:இரண்டு பள்ளிகளிலும் மாநில நிதி ஆணையம் பள்ளி உட்கட்டமைப்பு நிதியிலிருந்து தலா ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளிகளில் மாணவர்கள் அமர்வதற்கு மேஜைகளுடன் கூடிய இருக்கைகள் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கலெக்டர் சரவணன், ஆர்.டி.ஓ., சக்திவேல், தாசில்தார் பழனிச்சாமி, நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, கமிஷனர் ஸ்வேதா, பொறியாளர் சுப்பிரமணிய பிரபு, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், ஒன்றிய செயலாளர் பொன்ராஜ், வர்த்தக அணி தலைவர் ஆறுமுகம், தலைமை ஆசிரியர்கள் மணிமொழி, கிருஷ்ணவேணி கலந்து கொண்டனர்.