ADDED : ஜன 13, 2026 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி வழங்காமல் ஏமாற்றியதை கண்டித்து திண்டுக்கல்- பழநி ரோட்டில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்றுடன் 8 நாட்களாக இடைநிலை பதிவு மூட்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் சேவியர் பவுல்ராஜ் தலைமை வகித்தார்.
நத்தம் வட்டாரத் தலைவர் ஜோசிக்குமார் முன்னிலை வகித்தார். இன்றும் காத்திருப்புப் போராட்டம் தொடரும் என மாவட்டத் தலைவர் ரத்தினவேல்பாண்டியன் தெரிவித்தார்.

