/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காற்று காலம் தொடங்க உள்ளதால் பட்டுப்போன மரங்களை அகற்றலாமே
/
காற்று காலம் தொடங்க உள்ளதால் பட்டுப்போன மரங்களை அகற்றலாமே
காற்று காலம் தொடங்க உள்ளதால் பட்டுப்போன மரங்களை அகற்றலாமே
காற்று காலம் தொடங்க உள்ளதால் பட்டுப்போன மரங்களை அகற்றலாமே
ADDED : ஜூன் 21, 2025 12:31 AM

ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பது வழக்கம். 2024ல் காற்றின் வேகம் அதிகரித்து இருந்ததால் ரோட்டோர மரங்கள் விழுந்து பல்வேறு விபத்துகள் ஏற்பட்டது. போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பழையான, பட்டுப்போன மரங்களின் கிளைகள், சிக்னல்கள், கட்டங்களின் மாடிகளில் உள்ள பேனர்களை அகற்ற அவசியம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சிக்னல்கள், சென்டர் மீடியன்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் எப்போது வேண்டுமானலும் காற்றில் பறந்து விபத்தை ஏற்படுத்தி விடும் அபாயம் உள்ளது. நகரின் எல்லை, முக்கிய கடைவீதிகளில் கட்டடங்களில் மாடிகளில் பல அடிகளில் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இரும்பு கம்பிகளால் வைக்கப்பட்டுள்ள இந்த போர்டுகள் காற்றின் வேகத்தில் விழ வாய்ப்பு உள்ளது.
அசம்பாவிதங்கள் நேரும் முன் அதன் உறுதித்தன்மையை சரிபார்த்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ரோட்டோரங்களில் பேனர்களை வைப்பதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். கொடைக்கானல், சிறுமலை செல்லும் மலைப்பாதைகளில் ரோட்டையொட்டி அமைந்துள்ள மரங்களின் கிளைளைள் வெட்ட வேண்டும். மாவட்டம் முழுவதும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.