/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருஆவினன்குடி கோயில் மண்டல பூஜை நிறைவு
/
திருஆவினன்குடி கோயில் மண்டல பூஜை நிறைவு
ADDED : ஜன 23, 2026 06:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி.ஜன.23--: பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நேற்று நிறைவடைந்தது.
பழநி திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம் 2025 டிச. 8ல் நடந்தது.
இதை தொடர்ந்து நேற்று முன்தினம் (ஜன.21) மாலை மண்டல நிறைவு பூஜையை முன்னிட்டு முதற்கால யாகம் துவங்கியது. நேற்று (ஜன.22) இரண்டாம் கால பூஜை நடைபெற்றது.
யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கோயில் வெளிப்பிரகாரத்தில் எடுத்துவரப்பட்டு உச்சிக்கால பூஜையில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உடன் நிறைவு பெற்றது. கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், உதவி கமிஷனர் லட்சுமி,கண்காணிப்பாளர் ராஜா, அழகர்சாமி கலந்து கொண்டனர்.

