ADDED : பிப் 07, 2026 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: திண்டுக்கல்மாவட்டம் பழநி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நின்ற நபர்களை ரோந்து போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் கேரள மாநிலம் பந்தனம்திட்டா பகுதியை சேர்ந்த சிராஜூமூன் 28, திருச்சூர் மாவட்டம் இருங்காலபூர் பகுதியை சேர்ந்த பரத் கிருஷ்ணா 25, எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த முஹம்மது நசீபில் 28,என்பது தெரிந்தது.
அவர் பள்ளி மாணவர்களுக்கு விற்க வைத்திருந்த 330 கிராம் கஞ்சா மிட்டாய், 330 கிராம் கஞ்சா பேஸ்ட்டை பறிமுதல் செய்த பழநி டவுன் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

