/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதுமாப்பிள்ளை கொலை போதை சிறார்கள் மூவர் கைது
/
புதுமாப்பிள்ளை கொலை போதை சிறார்கள் மூவர் கைது
ADDED : ஜன 02, 2025 05:37 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு காப்பிளியப்பட்டியில் வீட்டில் துாங்கி கொண்டிருந்த புதுமாப்பிள்ளையை முன்விரோதம் காரணமாக மதுபோதையிலிருந்த 3 சிறுவர்கள் கொலை செய்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
தாடிக்கொம்பு காப்பிளியப்பட்டி ஏ.டி.காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி காளீஸ்வரன் 25. திருமணம் ஆகி 6 மாதமாகிறது. இவர் நேற்று முன்தினம் மது அருந்திய நிலையில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதை காளீஸ்வரன் கண்டிக்க தகராறு ஏற்பட்டது.
இதன் ஆத்திரத்தில் மூவரும் அன்று இரவு 11:00 மணிக்கு வீட்டில் துாங்கி கொண்டிருந்த காளீஸ்வரனை இரும்பு கம்பியால் தலையில் அடித்து கொலை செய்தனர். இதிலும் ஆத்திரம் தீராமல் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பினர். தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து 3 சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

