ADDED : ஜூன் 15, 2025 06:47 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல் : தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் (டி.என்.ஜி.ஓ.யு.,) 2025- --28 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் தேர்தல் அலுவலரான தமிழக நில அளவைத்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மகேந்திர குமார் தலைமையில் திண்டுக்கல்லில் நடந்தது.
அரசு அலுவலர் ஒன்றிய முன்னாள் மாநிலத்தலைவர் தண்டபாணி, மாநில செயலாளர், தேவேந்திரன் தேர்தல் பார்வையாளராக செயல்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட தலைவராக பார்த்த சாரதி, செயலாளராக பொன் இளங்கோ, பொருளாளராக முகமதுரபீக் உள்ளிட்ட 26 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
