/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
/
'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ADDED : ஆக 18, 2025 01:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: -திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் விடுமுறையால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, கோக்கர்ஸ்வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, வனச்சுற்றுலா தலம், மன்னவனூர் சூழல் சுற்றுலா தலங்களில் பயணிகள் குவிந்தனர். ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள், குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.
அவ்வப்போது தரையிறங்கிய மேக கூட்டம், சாரல் மழை என சில்லிடும் சீதோஷ்ண நிலையை பயணிகள் ரசித்தனர்.

