ADDED : மார் 07, 2026 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அருகே செங்கோட்டையில் ஆதாளி அம்மன், கம்பத்தடியான் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு அம்மன் பூங்கரக ஊர்வலம் நடந்தது.
கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் சீரகம்பட்டி, கொக்குப்பட்டி, சுட்டிகாலாடிபட்டி ஆகிய கிராமங்களில் இருந்து பெட்டி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு மேளதாளம், வானவேடிக்கை, முளைப்பாரியுடன் ஊர்வலம் நடந்தது. பச்சை குடிசையில் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம், தீச்சட்டி எடுத்து, கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாயக்கர் அழைப்பைத் தொடர்ந்து ஏராளமானோர் பாரம்பரிய வேடமணிந்து கையில் கம்புடன் பாரம்பரிய எருது ஓட்டம் சடங்கு நடந்தது.

