ADDED : ஆக 25, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
நத்தம், ஆக.26-
நத்தம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் மின்வாரிய அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது. திண்டுக்கல் தெற்கு செயற்பொறியாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர் புண்ணியராகவன், உதவி மின்பொறியாளர் வசந்தபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் பணியின்போது மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. உபகோட்ட பொறியாளர்கள் பாரதிதாசன், நாகேந்திரன், முத்துக்கண்ணன், கோமளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
