sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 மரம் வளர்ப்பால் உருவாகும் வேடந்தாங்கல்

/

 மரம் வளர்ப்பால் உருவாகும் வேடந்தாங்கல்

 மரம் வளர்ப்பால் உருவாகும் வேடந்தாங்கல்

 மரம் வளர்ப்பால் உருவாகும் வேடந்தாங்கல்


ADDED : டிச 15, 2025 05:54 AM

Google News

ADDED : டிச 15, 2025 05:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகளுக்குத் தேவையான நீர் நிலை, அதற்கான உணவு, கூடு கட்டி வாழ்வதற்கான அடர்ந்த மரங்கள் நிறைந்திருக்கும். அதேபோல்தான் வேடசந்தூர் பகுதியிலும் ஒரு வேடந்தாங்கலாய் மரங்கள் நிறைந்த பகுதியாக ஓர் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது.

வேடசந்தூர் - திண்டுக்கல் கரூர் ரோட்டில் விருதலைப்பட்டி அருகே அமைந்துள்ளது ஈஸ்ட்மேன் தனியார் நூற்பாலை. 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த நூற்பாலையில், கட்டடங்கள், அலுவலகங்கள் தவிர எஞ்சியுள்ள அனைத்து இடங்களிலும் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வைத்து தண்ணீர் விட்டு, அதற்கென்று ஆட்களை நியமித்து பராமரித்து வருகின்றனர். மெயின் ரோட்டில் சென்றாலே ரோட்டோரம் மட்டுமின்றி, உள் பகுதியிலும் அடர்ந்த தோப்பாக மரங்கள் காட்சியளிக்கின்றன.

வேம்பு, புங்கை, நவா உள்ளிட்ட பல்வேறு வகையிலான மரங்கள் அடர்த்தியாக தோப்பாக கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளிக்கின்றன. இந்த நூற்பாலைப் பகுதியில், மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான பறவைகள், குறிப்பாக காகங்கள், மைனா, கொக்குகள், குருவிகள், கிளிகள், மயில்கள் கூட்டம் கூட்டமாக வந்து சேர்கின்றன. அவைகளுக்கு தேவையான உணவும், நீரும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், ஊழியர்களால் மரங்கள் வளர்க்கப்படும் பணி தொடர்கிறது.






      Dinamalar
      Follow us